என்.எம்.அப்துல்லாஹ்-
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் தற்போது தம்முடைய பூர்வீக பிரதேசங்களில் மீளவும் குடியேறி வருகின்றார்கள், இருப்பினும் அவர்களது மீள்குடியேற்ற செயற்திட்டங்களில் பாரிய குறைபாடுகள் தொடர்ந்தும் நிறைவேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மீளக்குடியேற்றப் பதிவுகள், மீள்குடியேறுவோர்க்கான காணி வழங்கல், வீட்டுத்திட்ட விடயங்கள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு விடயங்களில் தொடர்ந்தும் குறைபாடுகள் நிலவுகின்றன;
குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் அரசியல் ரீதியான பலவீனத்தைக் கொண்டவர்கள், இதன் காரணமாக அரசியல் ரீதியாக ஸ்திரமான முன்னெடுப்புகளை அவர்களால் முன்னெடுக்கவோ, அல்லது அரசியல் ரீதியாக தம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதில் பலத்த சிரமங்கள் தொடர்ந்தும் நிலவிவருகின்றது. 2009-2016 வரையான கடந்த 7வருடங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் அரசியல் ரீதியாக தம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது சாத்தியமே என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள், இருப்பினும் இதுநாள்வரை அவ்வாறு அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது சாத்தியமற்றுப் போயிற்று.
சிவில் சமூகச் செயற்பாட்டின் மூலமே யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் தம்முடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை அடைந்துகொள்ள முடியும். என்பது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உணர்த்தப்பட்டு வந்திருக்கின்றது; அந்தவகையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஒரு விஷேட மீள்குடியேற்ற திட்டமிடல் அமர்வு இம்மாதம் (ஆகஸ்ட்) 27ம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வமர்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் சிவில் சமூகத்தினரும், அரச அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் ஒருங்கிணைந்து மீள்குடியேற்றத் திட்டமிடலுக்கான முன்மொழிவுகளைத் தயார் செய்யவுள்ளனர்.
மேற்படி அமர்வில் கலந்துகொள்வதற்கு ஆர்வமுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி சிவில் சமூகப் பிரதிநிதிகள் (அப்துல்லாஹ் 0773454190) (நிராஸ் 0777067366) ஆகியோருடன் தொடர்புகொண்டு தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளமுடியும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்