4,000 ஹெரோய்ன் பக்கெட் வைத்திருந்த அதுருகிரியப் பகுதிய ஒருவர் கைது

மி ரிஹான சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 4,000 ஹெரோய்ன் பக்கெட்கள் வைத்திருந்த நபரொருவரை, அதுருகிரியப் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு மோட்டார் சைக்கிளிலே குறித்த ஹெரோய்ன் பக்கெட்களை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற வேளையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அருகிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பிறிதொரு சந்தேகநபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூன்று, அலைபேசிகள் ஐந்து, பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் ஹெரோய்ன் தூள் பொதி செய்யும் இயந்திரம் ஆகிவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த இரு சந்தேகநபர்களையும், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை (28) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
த.மி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -