எம்.வை.அமீர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம்.ஜெமீலும், முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஒதுங்கி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் செயற்பட்டுக்கொண்டிருந்தபோது சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸுக்காக உள்வாங்கப்பட்ட ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஹிபத்துல் கரீம் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வென்றெடுப்பதற்காக ஜெமீலின் போராட்டத்தில் தன்னையும் ஊருக்காய் அர்ப்பணித்து, முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்கத் தகுதியான உண்மையான தலைமை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தான் என்று ஏற்றுக் கொண்டு 2016-07-28 ஆம் திகதி உத்தியோகபூர்வோமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்வதாக, இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சருடைய தொடர்பாடல் அதிகாரியும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீலின் செயலாளருமான ஏ.எல்.ஜஹான் தெரிவித்தார்.