தெஹி­வளை பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல்..!

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலின் விஸ்த­ரிப்­புக்கு பொலிஸாரும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­துடன் கட்­டிட நிர்­மாணப் பொருட்­களை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொள்­ளு­மாறும் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு நேற்று -25- உத்­த­ர­விட்­டனர். 

தெஹி­வளை பாத்யா மாவத்­தை­யி­லுள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பெளத்த தேரர்கள் கடந்த திங்கள் இரவு கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டனர். பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­தனர். 

இத­னை­ய­டுத்து நேற்­று­முன்­தினம் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களை தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து விசார­ணை­யொன்­றினை நடாத்­தினார். 

ஆர்.ஆர்.டி. அமைப்பின் சட்­டத்­த­ர­ணி­களும் விசா­ர­ணையில் கலந்து கொண்­டனர். விசா­ர­ணையில் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்கு எதிர்ப்பு வெளி­யிட்ட தேரர்­களும் கலந்து கொண்­டனர்.

பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணிகள் உரிய சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெறப்­பட்டே மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தெரி­வித்­தனர். அதற்­கான ஆவ­ணங்­களும் பொலி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

ஆனந்த சாகர தேரர் தலை­மை­யி­லான பெளத்த தேரர்கள் தமக்கு அச்­சு­றுத்தல் விடுப்­ப­தா­கவும் முறை­யிட்­டனர். 

இந்­நி­லை­யிலே பள்­ளி­வாசல் நிர்­வாகம் கட்­டிட நிர்­மாணப் பொருட்­களை நேற்று கொண்டு வந்து இறக்கிக் கொண்­டி­ருக்­கையில் பொலிஸார் அவ்­வி­டத்­துக்கு வந்து கட்­டிட நிர்­மாணப் பொருட்­களை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வாறு அகற்றிக்கொள்ளாவிட்டால் கட்டிட நிர்மாணப்பணிகளை முழுமையாக நிறுத்திவிடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.
விடிவெள்ளி ARA.Fareel- jm

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -