கம்பளை: மண்சரிவு அபாயம் நிலவும் இடத்தில் அமைச்சர் ஹக்கீம்

ம்பளை, சக்கரம்கொடுவ பிரதேசத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட சிறிய அளவிலான மண் சரிவு அபாயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை (21) சென்று பார்வையிட்டதோடு, மேலும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என அச்சம் நிலவும் வீடுகளில் வசிப்பவர்களையும் சந்தித்து நிலைமை பற்றி உரையாடினார். 

சிறிய வீடுகளிலும் தரையிலும் காணப்படும் சிறிய வெடிப்புகளையும் அவர் அவதானித்தார். மழை தொடர்ந்து நீடிக்குமானால், அங்கு குடியிருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் ஆலோசனை வழங்கினார்.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் உயர் அதிகாரிகளோடும் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -