ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டமை தான் செய்த பெரும் தவறு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வேலை செய்ய முடியாத ஒரு அமைச்சான மக்கள் தொடர்பாடல் அமைச்சை எனக்கு தந்திருந்தனர்.
ருஹுணுப் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் நிதி அமைச்சராக இருந்த ரொனி டி மெலின் பெயரை தான் முன்மொழிந்தபோது ராஜபக்ஷாக்கள் அதனைப் புறக்கணித்தனர்.
நன்றி மறக்காமல் இருப்பது நல்லவர்களின் பண்பு எனவும், நன்றி மறப்பது ராஜபக்ஷாக்களின் பண்பு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.