விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இன்று (09) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில், இன்றைய தினமும் அவருக்கு பிணை மறுக்கப்படும் வாய்ப்புக்களே அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சில பெளத்த பிக்குகள், பொலிஸாரால் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் ஞானசார தேரர் மேலும் தடுத்து வைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிங்கள ராவய தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், ராவணா பலயவின் சந்தாதிஸ்ஸ தேரர் ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
சிங்கள ராவயவின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் உட்பட்ட இரு பெளத்த பிக்குகளே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.