தேசிய கணிதஒலிம்பியாட் போட்டியில் சாதனை படைத்த கேசித்! இன்று கல்லூரியில் கௌரவிப்பு.



வி.ரி.சகாதேவராஜா-
தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் பிரதீபன் கேசித் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

பாணாடிருப்பை சேர்ந்த பிரதீபன் பிருந்தா தம்பதியினரின் மூத்த புதல்வனான கேசித் கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒலிம்பியாட் கணித விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்திற்கு பங்குபற்றிய மாணவர்களையும் மற்றும் தேசிய ஒலிம்பியாட் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவன் பிரதீபன் கேசித்தையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (29) திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ச.இ.றெஜினோல்ட் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதீபன் கேசித் விசேடமாக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :