கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன் ஆகிய இருவரும் இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற சேவை மூப்பு அடிப்படையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் இருவரும் சித்தியடைந்துள்ளனர்.
இவ்வாறு, இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள இருவருக்கும் கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment