உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்கள் கௌரவித்த மே தின நிகழ்வு சாய்ந்தமருதில் !



சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்கள் கௌரவிக்கும் மே தின நிகழ்வு வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக முன்றலில் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்ட்டது.

இன்று முழுநாளும் தொழிலாளிகளை கொண்டாடும் விதமாக வடிவமைக்கப்பட்ட உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்கள் கௌரவிக்கும் இன்றைய நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.எம். சம்சுதீன், சிரேஷ்ட வர்த்தகர் ஆதம்பாவா மீராசாஹிப், சிரேஷ்ட கல்விமான் ஏ.எல்.எம்.பஷீர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சுகாதார பிரிவின் ஊழியர்கள், திண்மக்கழிவகற்றல் பிரிவின் ஊழியர்கள் சகலருக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று முழுநாளும் தொழிலாளிகளை கௌரவிக்கும் வகையில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.








































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :