சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம்.நஸீர் பதவியேற்பு (படங்கள்)

பைஷல் இஸமாயில் -

கிழக்கு மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீர் இன்று திங்கட்கிழைமை (26) கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று மதியம் 2.30 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுணர் காரியாலயதில் இடம்பெற்ற பதவியேற்று நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் மற்றும் கல்வியமைச்சர் தண்டாயுதபானி வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி ஆகியோருடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதுடன் விஸேடமாக பின்தங்கிய மூவின மக்களுக்கும் சிறந்த சேவையாற்ற இவ்வமைச்சின் மூலம் நான் பயன்படுத்துவேன்.

நான் இன்று சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றதற்கு காரணமாக அமைந்த கட்சியின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீமுக்கும், முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கட்சியின் போராளிகளுக்கும் இந்த இடத்தில் நன்றி தெரிவிக்கும் இதேவேளை எல்லாவற்றுக்கும் மேலாக என்னைப் படைத்த அல்லாஹ்வுக்கு எல்லாம் உரித்தாகும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -