திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு புனித ராமழானுக்காக பேரீச்சம்பழம் விநியோகம்!

புனித ராமழான் மாதத்துக்காக சவூதி அரேபியா அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கும் வைபவம் சனிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த உலமா சபைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அந்தந்தப் பகுதி பள்ளிவாயல் நிர்வாகிகள் ஊடாகப் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு உலமா சபைப் பிரதிநிதிகளிடம் சுமார் 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன. 

இந்தப் பேரீச்சம் பழங்களை திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பு முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஹலீமினால் மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -