கஹவத்தை ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான ஏழ்வருக்கு பிணை!

ஹவத்தை - கோடகேதன பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஏழ்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு பொலிஸ் பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

கோடகேதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை குறித்த ஏழ்வரும் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -