பொறல்ல ஜாமியுல் அல்பார் பள்ளிவாயல் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட தாக்குதலினால் பள்ளிவாயலின் சில கண்ணாடிகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் அவ்விடத்தில் காணாமல் போன ஆட்டோ ஒன்றை தேடிய குழு ஒன்று பள்ளிவாயல் CCTV வீடியோ ஒளிப்பதிவுகளை கோரியதாகவும், பள்ளி நிர்வாகம் சீசீடிவி இயங்கவில்லை என்று சொன்னதாகவும் தெரிகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது அங்கு சுமூகமான நிலையே காணப்படுகின்றது.

