யாழ் பதற்ற நிலை: 127 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

இந்த பதற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த மோதல் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். 

சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டம் செய்தமை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தெரண    ச  

காலை இடம்பெற்ற சம்பவம்:
 புங்குடுதீவு மாணவி படுகொலை குற்றவாளிகளை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வந்தவேளை அங்கு வீதியின் அருகில் கூடியிருந்த இளைஞர்கள் சத்தமிட்டபடி நீதிமன்றத்தை நோக்கி கற்களை வீசியுள்ளனர். 
 இதனையடுத்து பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முற்பட்டனர். இதனையடுத்து விஷேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டதோடு, சம்பவத்தில் சில பொலிஸார் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -