முன்னாள் அமைச்சர்கள் 8 பேரை கைது செய்ய நடவடிக்கை - பொலிஸ்

டுத்து வரும் இரு வாரக்காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ஊழல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் 25 அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்பினரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே கைது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த தகவல் வழங்கியுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர, 52 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்கள் குறித்து தகவல்கள் திரட்டப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -