அடுத்து வரும் இரு வாரக்காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊழல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் 25 அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்பினரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே கைது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த தகவல் வழங்கியுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர, 52 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்கள் குறித்து தகவல்கள் திரட்டப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.