இரண்டாயிரம் ரூபாய்பெறுமதியான சத்துணவு பொதிகள் 246 கர்ப்பிணிகளுக்கு ஆலையடிவேம்பில்



இஹ்திஸாம், அக்கரைப்பற்று-

ரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள தாய்மாருக்கானசத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரோக்கியமான தாய்மை மற்றும் வளமான எதிர்கால சமுதாயம் எனும் தொனிப்பொருளpல்முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டத்தின் மூலம் ஆரோக்கியமான மூளைப் பலமுள்ள சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கமைவாக சிறுவர்கள் விவகாரஇராஜாங்க அமைச்சினhல் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்நிகழ்வில், இரண்டாயிரம் ரூபாய்பெறுமதியான சத்துணவு பொதிகள் 246 கர்ப்பிணிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.முனவ்பர் தலைமையில்பிரதேச சுகாதார வைத்திய பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன், ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வி.ஜெகதீசன், பொதுச்சுகதார பரிசோதகர்களான ப.கேதீஸ்வரன்,எம்.மனோரஞ்சிதம், குடும்ப சுகாதார மருத்துவ தாதிகள்; உட்பட பலர் கலந்துகொண்டுசத்துணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

கருவுற்று 05 ஆம் மாதத்திலிருந்து குழந்தை பிறந்து 04 மாதங்கள் முடியும் வரையான 10 மாதங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா வீதம் இருபதாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -