வாகன விபத்து - இருவர் வைத்தியசாலையில்!

பரூக் சிஹான் -
யாழ். இணுவில் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (16) இடம் பெற்ற வாகன விபத்தில், ஏழாலை மயிலணியைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். 

சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன்; எதிரே வந்த 'கயஸ்' ரக வாகனம் மோதியுள்ளது. வேகமாக வந்த 'கயஸ்' ரக வாகனம் திடீரென நிறுத்த முற்பட்ட நிலையில், வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிளுடன் மோதியது எனவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -