பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நலன்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும்!

பைஷல் இஸ்மாயில்-

ள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் திற­மை­யாக செயற்­ப­டு­வ­துடன், எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நலன்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அட்­டா­ளைச்­சேனை நூர் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­னரின் தூர­நோக்கு செயற்­பா­டுகள் பாராட்டத் தக்­க­வை­யாக உள்­ளன என்று கிழக்கு மாகாண சபை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினரும் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்­பி­னரின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி­யி­லி­ருந்து கொள்­வ­னவு செய்­யப்­பட்ட ஒரு தொகுதி பிளாஸ்­டிக் கதி­ரை­களை கைய­ளித்தல், நூருல்லாஹ் அல்-­குர்ஆன் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு அல்-­குர்ஆன் பிர­தி­களை கைய­ளித்தல் நிகழ்­வு­களில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய மாகாண சபை உறுப்­பினர் நஸீர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மாகாண சபை உறுப்­பினர் நஸீர் மேலும் அங்கு தெரிவிக்கையில்;

சமய நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வி­களை வழங்­கு­வதும், சமய நிறு­வ­னங்­களில் இடம்­பெறும் நிகழ்­வு­களில் கலந்து கொள்­வதும் மன­துக்கு நிறை­வைத்­த­ரு­கின்­றன. அந்­த­வ­கையில் நாம் இறை இல்­லங்­க­ளான பள்­ளி­வா­சல்­க­ளுக்கு கணி­ச­மா­ன­ளவு உத­வி­களை வழங்கி வரு­கின்றோம். நான் பள்ளிவாயலுக்கும், மத்ரஸாக்களுக்கும், பாடசாலைகளுக்கும் செய்யும் சேவைகள் என்றும் தொடர்ந்து கொண்டே செல்லும். 

இந்தச் சேவை நான் அரசியலுக்கு வந்த பின் செய்யவில்லை அதற்கு முன்னே செய்துவருகின்றேன். அன்று தொட்டு இன்றுவரையில் இவ்வாறான கல்வி நிறுவனங்களுக்கும், வணக்கஸ்தளங்களுக்கும் பல உதவிகளை செய்வதற்கான பல திட்டங்களை வகுத்தும் வருகின்றேன்.

நூர் பள்­ளி­வா­சலுக்கு உதவி வழங்­கு­வது இது முதற்­த­ட­வை­யல்ல, 2012 ஆம் ஆண்டு அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபை தவி­சா­ள­ராக பதவி வகித்த காலப் பகு­தி­யிலும் இப்­பள்­ளி­வா­சலுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­துள்­ளமை வர­லாற்றுப் பதி­வாகும்.

எதிர்­கா­லத்தில் அம்பாறை மாவட்டத்தையும் தாண்டி இவ்வாறான உத­வி­களை வழங்க நான் சித்­த­மா­யுள்ளேன். இப்­பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யா­ளர்­களின் அர்ப்­ப­ணிப்பு, விடா­மு­யற்சி என்­ப­னவே இப்­பள்­ளி­வாசல் அபி­வி­ருத்­திக்கு கார­ண­மாகும் எனலாம். இன்­றைய சமய நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஆரிப் சம்­சுடீன் கலந்து கொண்டு பிர­தேச மக்­களை மகிழ்­வித்­துள்ளார். சமூகத்தின் விடுதலைக்கான சரியான பாதையை தெரிவுசெய்து, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பயணிக்கும் துணிச்சல்மிக்க இளம் மாகாணசபை உறுப்பினர் அவர். அவரும் இவ்வாறான சமயநிறுவனங்களுக்கு பல உதவிகளை அதிகம் வழங்கி வருகின்றவர் என்றார்.

பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபைத் தலைவர் யு.எம்.அப்துல் கரீம் தலை­மையில் நடை­பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­ ஆரிப் சம்­சுடீன், பிர­தேச சபை உறுப்­பி­னர்­களான ஐ.எல்.முனாப், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.எம்.நஸீர், ஓய்­வு­பெற்ற பிர­தேச செய­லாளர் ஏ.எல்.இப்­றா­லெவ்வை,சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உயர்­பீட உறுப்­பினர் யு.எம்.வாஹிட் உட்­பட பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பிர­தேச மக்கள், மாண­வர்கள் கலந்து கொண்­டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -