மகிந்த ஆதரவாளர்களை களையெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை களையெடுத்து விட்டு கட்சியில் தனது கரத்தை பலப்படுத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த பதவியை முன்னர் வகித்து வந்ததுடன் அதனை ராஜினாமா செய்திருந்தார்.

தேசிய அமைப்பாளர் பதவிக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும வகித்து வந்த பொருளாளர் பதவி, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.பி. நாவின்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

முன்னாள் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -