பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை!

க்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மத்துகம நீதவான் நீதிமன்றில் அவர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்துகம நீதவான் தர்சிகா சாமினி விஜேபண்டார, பாலித தெவரப்பெருமவை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

பாலித தெவப்பெருமவின் கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தெவரப்பெருமவின் சட்டத்தரணிகள் சில தடவைகள் பிணைக்காக இதற்கு முன்னர் விண்ணப்பித்த போதிலும், நீதவான் பிணை வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை மண்டியிட வைத்து தாக்குதல் நடத்தி கலகம் ஏற்படுத்திய சம்பவத்தில் பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -