அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் தனக்கில்லை: மகனின் அரசியல் முன்னேற்றத்துக்கு நடவடிக்கை- மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நுகேகொடையில் இன்று பொதுக் கூட்டமொன்று நடைபெறவுள்ள நிலையில், தான் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அவருக்கு நெருக்கமான சிலரிடமே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னும் மூன்றாவது தடவையும் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக முயன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தின் இரு வருடங்களையும் இழந்த மஹிந்த ராஜபக்ச இனியும் பிரதான அரசியலில் ஈடுபடாது தனது மகனான நாமல் ராஜபக்சவையே முற்படுத்த விரும்புவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளமையும் நாளைய தினம் கூட்டம் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த நிகழ்வு இன்னும் சில விநாடிகளில் (3.00) மணிக்கு ஆரம்பம்... விமல் வீரவன்ச நிகழ்வு இடத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -