மைத்திரிபால, ரணில், சந்திரிகா, ரவூப், சம்பந்தன் ஆகிய அனைவரும்இணைந்து நாட்டில் இனரீதியாக தமிழ் முஸ்லிம் அலகுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழ், முஸ்லிம் என்ற இன அடிப்படையில் அலகுகளை அமைத்து நாட்டை துண்டாட முயற்சிக்கின்றனர். இது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
எதிரணி முகாமானது குழப்பங்களின் கூடாரமாகவே தொடர்ந்து காணப்படுகின்றது. குறிப்பாக எதிரணியில் அங்கம் வகிக்கும் சந்திரிகா குமாரதுங்க மாகாண சபைகளின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதாக யாழ்ப்பாணத்தில் கூறினார். ஆனால் மறுபுறம் அதே எதிரணியில் அங்கம் வகிக்கும் சம்பிக்க ரணவக்க மாகாண சபைகளின் அதிகாரம் குறைக்கப்படும் என்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் மாற்றப்படும் எனவும் ஆளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்றும் கூறுகின்றார். வானத்தையும் பூமியையும் போன்றும் கருப்பும் வௌ்ளையும் போன்று பரஸ்பரம் விரோதமான கருத்துக்களை கொண்டுள்ள இவர்கள் எவ்வாறு இணைந்து நாட்டை ஆ்டசி் செய்வார்கள்?
மைத்திரிபால ரணில் சந்திரிகா ரவூப் சம்மந்தன் ஆகிய அனைவரும் ஜனாதிபதியை தோற்கடிக்கவே முன்வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து நாட்டில் இன ரீதியாக தமிழ் முஸ்லிம் அலகுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழ் முஸ்லிம் என்ற இன அடிப்படையில் அலகுகளை அமைத்து நாட்டை துண்டாட முயற்சிக்கின்றனர். இது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
ரவூப் ஹக்கீம் எம்மிடம் முஸ்லிம்களுக்கான தனி அலகை கோரினார். நாம் முடியாது என்று கூறினோம். தற்போது அவர் எதிரணிப் பக்கம் சென்றுள்ளார். வடக்கு கிழக்கை இணைத்து தமிழ் பேசும் அலகை உருவாக்குவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும். அதற்கும் எதிரணி இணங்கியுள்ளது. மேலும் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுதல் வட மாகாண சபைக்கு அதிகாரங்ளை வழங்குதல் ஆளுநரின் அதிகாரங்களை குறைத்தல் என்பவற்றுக்கு கூடடமைப்புடன் சந்திரிகா இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்.
இவ்வாறு தனி அலகுகளை உருவாக்கிய நாடுகளுக்கு என்ன நடந்தது என்று எமக்கு தெரியும். யூகோஸ்லாவியா இவ்வாறான முயற்சியில் துண்டாடப்பட்டது. புலிகள் உள்நாட்டில் தோற்கடிக்கபபட்டாலும் சர்வதேச மட்டத்தில் வலுவாக இயங்குகின்றனர். ருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்றார். அவர்களுக்கு அமைச்சரவை உள்ளது. தேர்தல் நடத்துகின்றனர். உள்நாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு மறைமுகமாக செயற்பட்டுவருகின்றது. எனவே நாட்டை இனரீதியாக பிரிப்பதற்கே சதி முயற்சி உள்ளது.
மைத்திரிபால சிறிசேனவை சந்திரிகா குமாரதுங்கவே இயக்கிவருகின்றார். வாக்குகள் கிடைக்கின்றன என்பதற்காக எதற்கும் உடன்பட முடியாது. எமது அரசாங்கத்தில் இனவாதிகள் இல்லை. இனவாதிகள் வேறு முகாமில் உள்ளனர். பலஸ்தீன நாடு உருவாகுவதற்கு ஜனாதிபதி மஹிந்த எழுப்பிய குரலுக்காக அந்நாட்டு ஜனாதிபதி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்தளவுக்கு ஜனாதிபதி சர்வதேச மேடைகளில் பலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்து வந்துள்ளார்.
எமது நாட்டு மக்கள் நன்றிக்கடன் உள்ளவர்கள். இந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதிக்காக அவர்கள் வாக்களிப்பார்கள். மக்கள் இந்த தலைவரை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். தற்போது வடககில் முதலமைச்சர் வேறு கல்வி பிரிவை கோரியுள்ளார். இதன்மூலம் தங்களை பிரித்துக்காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். யுத்த ரீதியில் ஈழக் கனவு தோல்வியடைந்துள்ளது. ஆனால் அதனை வேறு வழியில் பெற முயற்சிக்கின்றனர். இந்த நாட்டுக்கு யுத்தகாலத்தில் இருந்த சவாலைவிட அதிகமான சவால் தற்போது உள்ளது என்பதனை மறக்க்கூடாது.
