நிலைமையின் அவசரத்தன்மையை உணர்ந்த கல்முனை மாநகர சபையின் சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தீன் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை பார்வையிட்டு, அதுகுறித்து கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபிக்கு தகவல் வழங்கினார்.
இதனையடுத்து மாநகர ஆணையாளரின் விசேட பணிப்புரையின் கீழ் சாய்ந்தமருது தோணா முகத்துவாரம் அவசரமாக வெட்டப்பட்டு தேங்கியிருந்த வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாக நீர் விரைவாக வடிந்துசென்றதுடன், பெரும் அளவிலான வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயத்தில் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபிக்கும், சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தீனுக்கும் சாய்ந்தமருது பிரதேச மக்கள் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.


0 comments :
Post a Comment