எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று என்னிடம் கேட்டால் மைத்திரி என்பவர் மச்சானும் அல்ல மகிந்த என்பவர் என் மாமாவும் அல்ல. ஆனால் மக்களுடைய மனங்களில் இருக்கும் முடிவுகள் வித்தியாசமானது. எனவே மக்களின் மனங்களுடன் உடன்பட்டு நாம் சென்றால் மக்களுக்கு சந்தோஷம் ஆனால் நாம் சிந்திக்க வேண்டும்.
கடந்த இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை எதிர்த்து வாக்களித்து மூக்குடைபட்டவர்கள் நாம் எனவே இம்முறை சற்று அல்ல நிதானமாக சிந்தித்து வாக்களித்து முஸ்லிம்களுக்கு ஏற்படும் சதிகளில் இருந்து தப்பிக்கவும் வழிகளை கண்டு பிடித்தாக வேண்டும்.
எனவே அரசுடன் இருந்த முக்கிய தலைகள் பிரிந்து செல்கின்ற போது நாம் ஏன் போகிறோம் என்பதனை ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறுவது மிகவும் இலேசானது எனவே மைத்திரி வென்றாலும், மகிந்த வென்றாலும் ஆட்சி செய்யப்போவது ஒரு பெரும்பான்மையினத்தவர்தான் எல்லாமே ஒரே பாம்புதான் எங்கு வைத்து கடிக்குமோ அங்கே கடித்து விடும் என்வே சரியான தீர்மானத்தை எடுத்து சரியாக செயல்பட கட்சியின் தீர்மானத்துக்கு மடிச்சிக்கட்டிக்கொண்டு பின்னால் நிற்பதுக்கு நான் ஆயத்தமாக இருக்கிறேன் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம் கண்டியில் நடந்த மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பின்போது தனது கருத்தை தெரிவித்தார்.