தேர்தல் காரணமாக பத்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

த்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாத பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து வடக்கு, கிழக்கிற்கும் மாற்றப்பட்டிருந்தனர். 

எது எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அஜித் ரோஹன, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த இடமாற்றம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :