கட்சி அரசியலுக்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க பாடுபட போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலிகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட அதிகாரசபை கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உற்பட ஏனைய அரசியல் கட்சிகளை சம்பந்தப்படுத்தி புதிய ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த ஐக்கிய தேசிய கட்சி எண்ணியிருந்தது.
எனினும் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஆதரவு வழங்கப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment