அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி




பி. முஹாஜிரீன்-

க்கரைப்பற்ற கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் பிரிவினால் இரண்டு நாள் வதிவிட முதலுதவிப் பயிற்சி இன்று (01) சனிக்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தலைமையில் ஆரம்பமான முதலுதவி பயிற்சி நெறிக்கு சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி பிரிவின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.எஸ்.எம். மிப்றாஸ்கான் வளவாளராகக் கலந்துகொண்டார்.

இப்பயிற்சி நெறியில் இதயம், கால், கை மற்றும் எனைய உடலுறுப்புக்களில் ஏற்படக்கூடிய முறிவுகள், விபத்துக் காயங்கள் மற்றும் ஆஸ்த்மா, சவாச நோய்கள் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளக்கான முதலுதவிப் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளன.

கடேட் பிரிவைச் சேர்ந்த 60 மாணவ மாணவிகள் இம்முதலுதவிப் பயிற்சி நெறிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறபா வித்தியாலயத்தின் முதலுதவி ஆசிரியர் ஜே. பஸ்;மிர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :