ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவின் கிளைக்குழுத் தெரிவு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்று மாலை 5.30 மணியளிவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்முனாப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபச் செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எம்.ஏ.கபுர், உயர்பீட உறுப்பினர் யு.எம்.வாஹிட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிளைக்குழுவின் தாப்பரியம் பற்றியும் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும், கிளைக்குழுவை எவ்வாறு நடாத்தவேண்டும் என்பன பற்றி மிகத் தெளிவான முறையில் உரை நிகழ்த்தினர்.
அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவுக்கு செயலாளராக தெரிவு செய்யப்பட்டவரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆவணங்களை கையளித்து வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment