சிறு பிள்ளைகளுடன் பிச்சை எடுக்க பள்ளிவாயலுக்கு வருபவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம்

சிறு பிள்ளைகளுடன் பிச்சை எடுக்க பள்ளிவாயலுக்கு வருபவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என மட்டக்களப்பு - மாவடிச்சேனை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும், வாழைச்சேனை நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் காரியாலயம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அண்மைக் காலமாக எமது பகுதியில் சிறுவர்களைக் கொண்டு பெரியவர்கள் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது.

அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை ஜூம்மா தினத்தில் ஜூம்மா பள்ளிவாயல் முற்றத்தில் சிறுவர்களுடன் பெண்கள் பிச்சை எடுப்பதற்காக அமர்ந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் இதனால் இதில் சம்மந்தப்படும் சிறுவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதால் இவற்றை தடுத்து நிறுத்துவதற்காக எமது திணைக்களம் பொலிசாரின் துணைகொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதன் காரணத்தால் வெள்ளிக்கிழமை ஜூம்மா தினத்தில் ஜூம்மா பள்ளிவாயல் முற்றத்தில் சிறுவர்களுடன் பிச்சை எடுப்பதற்காக வருபவர்களுக்கு அனுமதியை வழங்காது தடுத்து உதவுமாறு வாழைச்சேனை நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி எம்.எம்.எச்.நியாமுதீன் எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இவ் எழுத்து மூல அறிவுறுத்தலின் பிரதி கிழக்கு மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளருக்கும், வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.<AD>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :