கரவாகான் காசிம் ஜீ- கண்ணீர் வந்து எம் கண்களை மறைக்கின்றனவே

பறக்கத்துள்ளா...

ரவாகான் காசிம் ஜீ எங்கள் அன்பன்

காலமெல்லாம் வரலற்றுப் பொய்கையில் ஊறி

வரலாற்று நூல் பல எழுதி இவ்வூர்

வாழும் மக்களுக் களித்தான் ஆதாரமாக


குலத்திலும் அவன் மேலான அன்பன்

குணத்திலும் அவன் தூய மேலாளன்

பண்டைக் கால கரவாகுவின் வரலாறு சேர்த்தான்

பண்பாளன் கலாபூஷணம் காசிம் ஜீக்குப் சோபனமே


ஏடு பலதேடி எங்கெல்லாம் சென்றானோ இன்று

ஏணிதனில் ஏறி அவன் வீட்டில் ஏடுகளைப் பார்க்க வைத்தான்

இரவு பகலாக ஏடுகளைப் பாதுகாத்தான்

இன்று அவன் பணி பாரெல்லாம் போற்றுகிறதே


அப்பன் பெயருக்கப்பால் அடுத்த சந்ததி

அறியாத இவ்வூர் மக்களின் பூர்வீகம் பற்றி

ஏழு தலைமுறை விளக்கி வைத்தான் அவர்கள்

என்றென்றும் மறக்காத செயல் என்றும் மாறாதே


காரியப்பர் வம்சம் காலம் காலமாக எம்

கல்முனையில் வாழ்ந்தார்கள் என்பதை

கனவிலும் நான் கண்டதில்லை. இதை

காட்டித் தந்தவன் காசிம் ஜீ


கண்டி மன்னர்களை காலமெலாம்

காத்தவர்கள் எம் கல்முனை மக்கள் என்று

வரலாற்றுண்மையை எமக்குரைத்தவன்

வரலாற்று மேலாளன் காசிம் ஜீதான் என்பதை மறக்கத்தான் முடியுமா


இன்னுமின்னும் எத்தனையோ சங்கதிகளை

இன்று எழுத்தில் வடித்தவன் காசிம் ஜீ. இவ்வூரின்

இனிய வரலாற்றின் பல பகுதிகளை எமக்கு

ஈந்தவள் கண்ணிய மேலாளன் காசிம் ஜீ


இன்றவன் எம்முடனில்லை அவன் ஈன்றெடுத்த வரலாற்று

இயல்கள் பல எம் கையில் அவனை எப்படி மறப்போம்

கண்ணீர் வந்து எம் கண்களை மறைக்கின்றனவே

கண்ணியமிக்க நாயனே எம் காசிம்ஜீக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை அளிப்பாயாக...


வரலாற்று நண்பர்கள் மற்றும் குடும்பம் சார்பாக
எம்.எம்.எச். அப்துல் காதர்
ஓய்வு பெற்ற அதிபர்,
கல்முனை.
2014.09.28

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :