அனுமதிப் பத்திரமின்றி மரக்குற்றிகளை ஏற்றிவந்த சாரதிக்கு ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணை

பி. முஹாஜிரீன்-

க்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிவந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்ற நீதவான் நீதிமன்றினால் ரூபா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றில் முதிரை மற்றும் தேக்கு மரக்குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த சாரதியையும் லொறியையும் பொலிஸார் நேற்று (05) கைது செய்தனர்.

லொறியின் சாரதியை அக்கரைப்பற்று நிதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய ஏ.எச்.எம். பஸீல் முன்னிலையில்  வெள்ளிக்கிழமை (05) ஆஜர் செய்தபோது ரூபா 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லொறி தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவருக்கெதிராக பொலிஸாரால் குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :