சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தும் அளவுக்கு இலங்கையில் எவ்விதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது இன்றைய நிலையில் ஒரு அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை நாங்கள் தொடர்ந்து நிராகரிப்போம். அதேவேளை இலங்கையின் நியாயத்தை எமது நட்பு நாடுகள் தெரிந்துகொள்வதற்காக முன்வைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது;
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இந்நிலையில் இலங்கை விவகாரம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் மனித உரிமைப் பேரவையின் சார்பில் வாய்மூல அறிக்கை இந்த அமர்வின் போது வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான அநீதியான மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகளை நிராகரிப்பது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம்.
சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தும் அளவுக்கு இலங்கையில் எவ்விதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது இன்றைய நிலையில் ஒரு அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை நாங்கள் தொடர்ந்து நிராகரிப்போம். அதேவேளை இலங்கையின் நியாயத்தை எமது நட்பு நாடுகள் தெரிந்துகொள்வதற்காக முன்வைப்போம்.
குறிப்பாக முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையையும் அவரின் செயற்பாடுகளையும் நாங்கள் நிராகரித்தோம். அவ்வாறே தொடர்ந்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை நிராகரிப்போம்.
.jpg)
0 comments :
Post a Comment