அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலக்கெடுவுக்கும் அச்சுறுத்தலுக்கும் அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. தீர்வைப் பெறவேண்டுமாயின் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வரவேண் டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சரும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுக்களுக்கு சாத்தியமில்லை. மாறாக தெரிவுக்குழுவுக்கே அவர்கள் வரவேண்டும். கூட்டமைப்பினர் சாத்வீக வழியில் போராடலாம். ஆனால் வன்முறையில் வழியில் பயணிக்க இடமளிக்கமாமட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டிய தேவை
கூட்டமைப்புக்கு இல்லை. இந்த பிரச்சினை நீடிப்பதே அவர்களின் தேவையாகவுள்ளது. காரணம் அரசாங்கத்துடன் மோதிக்கொண்டிருந்தால்தான் கூட்டமைப்பினர் வடக்கில் அரசியல் செய்யலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
தேசிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நாங்கள் நியமித்துள்ளோம். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது. அந்த கோரிக்கையை தற்போதும் நாங்கள் முன்வைக்கின்றோம்.
அரசியல் தீர்வு விரைவாக வரவேண்டுமானால் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். ஆனால் கூட்டமைப்புக்கு அவ்வாறு விரைவாக தீர்வை பெறும் எண்ணம் இல்லை. காரணம் விரைவான தீர்வு கிடைத்துவிட்டால் அவர்களினால் வடக்கில் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை. இந்த பிரச்சினை நீடிப்பதே அவர்களின் தேவையாகவுள்ளது. காரணம் அரசாங்கத்துடன் மோதிக்கொண்டிருந்தால்தான் கூட்டமைப்பினர் வடக்கில் அரசியல் செய்யலாம் என்பதால் அதனை இழுத்தடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இது இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை அரசாங்கம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. ஆளும் கடசி அவர்களுடன் பேச்சை நடத்திவிட்டு பின்னர் ஏனைய கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கவேண்டும். அதனைவிட அனைத்து கட்சிகளும் ஒரு மேசையில் அமர்ந்து பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுவதே பொருத்தமாக அமையும்.
அதனால்தான் தெரிவுக்குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இதற்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கின்றேன். நாங்கள் குறுகிய காலத்தில் தீர்வை அடைவதற்கான வழியை கூறுகின்றோம். ஆனால் கூட்டமைப்பினரோ காலத்தை இழுத்தடித்து பிரச்சினையை நீடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்றே கூறுகின்றனர். ஆனால் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராமல் உள்ளது.
இதேவேளை அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலக்கெடுவுக்கும் அச்சுறுத்தலுகக்கும் அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது. தீர்வைப் பெறவேண்டுமாயின் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வரவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுக்களுக்கு சாத்தியமில்லை. மாறாக தெரிவுக்குழுவுக்கே அவர்கள் வரவேண்டும். கூட்டமைப்பினர் சாத்வீக வழியில் போராடலாம். ஆனால் வன்முறை வழியில் பயணிக்க இடமளிக்கமாமட்டோம். யாருக்கும் பயந்துகொண்டு நிலைப்பாட்டை மாற்றும் பழக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. எமது நிலைப்பாட்டில் ஒருபோதும் எந்த மாற்றமும் ஏற்படாது.
தீர்வுக்கு அவசரம் எனின் கூட்டமைப்புககு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். அங்கு வந்து அதனை குறிப்பிடலாம். அது மட்டுமன்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றவேண்டும் என்று யார் கூறினாலும் அதனையும் தெரிவுக்குழுவில் கூறலாம். தற்போதைக்கும் அவ்வாறான பல யோசனைகள் தெரிவுக்குழுவுக்கு வந்துள்ளன. அதற்கு மாறுபட்ட வகையிலான கருத்துக்களும் வந்துள்ளன.

0 comments :
Post a Comment