நிர்வாக பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது: அச்சத்தில் சிறுபான்மை மக்கள் - அமைச்சர் ஹக்கீம்

யங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நிர்வாக பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதோ என்ற அச்சம் சிறுபான்மையின மக்களிடையே தோன்றியுள்ளதாக சிறீலங்கா முஸ்லீம் காங்ரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்றுமுன் தினம் (03.08.14) நடைபெற்ற வைத்திய நிபுணர்களுக்கான விடுதிக் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் தமிழில் தேசிய கீதத்தை பாடும் நிகழ்ச்சிகளையே ஏற்பாடு செய்வேன்.

இன்று கிண்ணியாவில் அதை துணிவோடு செய்தார்கள். நான் அதற்காக இங்குள்ள ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுகின்றேன்.
ஓர் உத்தியோக பூர்வ நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும்தான் பாட வேண்டும் என்று ஒரு தேவையில்லாத வலுக் கட்டாயம் திணிக்கப்படுகின்றது.

இந்தத் திணிப்புக் கெதிராக பேசுவதற்கும் அதற்கு கெதிராக துணிவோடு நடப்பதற்கும் எங்களால் முடியவில்லை என்றால் நாங்கள் இந்த ஆட்சியில் பங்காளியாக இருப்பதில் அர்த்தமில்லை.

எந்த மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொண்டுவரப்பட்ட பின் அந்த இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு இருக்கின்றது.

ஆணைக்குழுவை அமைத்து அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று சர்வதேசத்துக்கு பறை சாற்றுவதில் எந்த அர்த்தமுமில்லை.

எனவேதான் இந்த நாட்டில் நீதி அமைச்சராக இருந்து கொண்டும் அரசாங்கத்தில் அங்கமாக இருந்து கொண்டும் இந்த விடயத்தில் கொஞ்சம் பிடிவாதப் போக்கை நான் கடைப்பிடிக்கிறேன்.

அரசியல் அமைப்பில் இருக்கின்ற விடயத்தை அனுபவிப்பதற்கு எங்களுக்கும் உரிமை இருக்கின்றது. அரசியல் அமைப்பில் இருக்கின்ற ஆயிரம் விடயங்களை இருப்பதே தெரியாமல் கிடப்பில் போடுகின்றார்கள்.

எங்கெல்லம் போகப் பயப்பட்டார்களோ அந்த இடங்கள் எல்லாம் இன்று தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இந்த நாட்டிலே தொல்பொருட்கள் எல்லாம் பாதுகாக்கப்படவேண்டும். தாராளமாக பாதுகாருங்கள். ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் எல்லா விடயங்களிலும் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று நில அளவையாளர்களுக்கு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு காணி ஒதுக்கின்ற வேலைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இவை சட்டம், நீதி, நியாய ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

யுத்த காலத்தில் இல்லாத வனப் பரிபாலனங்கள் அதிகாரிகளுடைய அட்டகாசம் இப்பொழுது தலைவிரித்து ஆடுகின்ற கோலத்தில் எல்லோரும் இருக்கின்றார்கள்.

அன்றாட ஜீவனனோபாயம். அதிலே படுகின்ற கஷ்டம் என்பன அரசாங்கத்தின் வருமானத்தை கருதி இன்று வருமானத்துக்;கு வாழ்வதாரமே பாதிக்கின்ற அளவுக்கு நடக்கின்றது.

இப்போது இடங்களிலே சட்டம் அமுலாக்கபடுவதில்லை. அசமந்தப் போக்கும் தாமதமுமே காணப்படுகின்றது. மக்களின் வாழ்வதார விடயத்தில் கடுமையான போக்கு மிகப் பெரிய நெருக்கடி இன்று காணப்படுகின்றது.

நிர்வாக ரீதியாக ஒரு விதப் பயங்கரவாதம் இன்று காணப்படுகின்றது. இந்த நாட்டிலே ஆயுதப்பயங்கரவாதம் தொடங்கியுள்ளது. இதற்கு அன்றாடம் மக்கள் முகங் கொடுத்து வருகின்றனர் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :