சியான் -
ஒலுவின் இலவன் ஸ்டார் நடாத்திய மின்னொளி கிரிக்கெட் மாபெரும் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று இரவு இலவன் ஸ்டார் கழகத்தின் தலைவர் பொலிஸ் சாஜன் றிபாய்தீன் தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.ஜெமீல், அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச உபதவுசாளர் ஏ.எல்.அமானுள்ளா, பிரதேசசபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ்.ஏல்.எல்றியாஸ், தொழிலதிபர் மிஜ்வத் ஆகியோருடன் இன்னும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
7 நாட்கள் தொடற்சியாக நடந்த இப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சம்மந்துறை SSC விழையாட்டுகழகமும் அட்டாளைச்சேனை எவடொப் விழையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டு விறுவிறுப்பான முறையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை எவடொப் அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 25000 ரூபா பணப்பரிசும் கேடயமும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment