செவனகலவிலுள்ள செவனகல மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (செப். 5) திறந்துவைத்தார்.
உயர்கல்விப் பாடசாலைகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஆயிரம் மஹிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடங்கள் உருவாக்கப்படுமென "மஹிந்த சிந்தனை - எதிர்காலத்திற்கான தொலைநோக்கு" தெரிவிக்கிறது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிறுவப்படும் மஹிந்தோதய தொழிநுட்பட ஆய்வுகூடம் ஒவ்வொன்றும் 40 கணினிகளுடன் கூடிய கணினிக்கூடம், 20 கணினிகளுடன் கூடிய மொழிக்கூடம், தொலைக்கல்விக்கான நெனச நிலையம், கணித ஆய்வுகூடம், விஞ்ஞான ஆய்வுகூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு
0 comments :
Post a Comment