ஹரீஸ்(எம்.பி) ஏற்பாட்டில் மாமனிதர் அஷ்ரப் அவர்களின் 14 வது ஞாபகார்த்த தின நிகழ்வுகள் கல்முனையில் -படங்கள்


எம்.ஐ.எம்.அஸ்ஹர்,இஸ்ஹாக் -

றைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 14 வது ஞாபகார்த்த தின நிகழ்வுகள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இன்று கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல்,சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் ,பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக்,பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியயலாளர் அஸ்லம் சஜா,பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்லூரியின் மஹிந்தோதய தொழில்நுட்ப கூடத்தின் முன்னால் அதிதிகளினால் நினைவு தின மரம்கள் நட்டி வைக்கப்பட்டதுடன் இதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் சுமார் 10 இலட்சம் ருபா செலவில்கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டப புனருத்தான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் ஞாபகார்த்த உரையும் துவாப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :