புது டில்லியில் அமைச்சர் ஹாபிஸ் ப.ஜ.க செயலர் சந்திப்பு

லங்கையின் ஒருமைப்பாட்டடிற்க்கு குந்தகம் விளைவிக்காது தீர்வு ஏற்படுவதையே இந்தியாவின் நிலைப்பாடாகும் என்றும் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த கொள்கையிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை எனவும் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அண்மையில் புதுடில்லியில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

 இந்த சந்திப்பின் போது இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வில் ஆழமான கருத்துப் பரிமாறல்களை இருவரும் மேற்கொண்டனர். 

இனப் பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பகிர்வின் அவசியம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் இந்த சந்திப்பின் போது இடித்துரைத்தார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முறையாக அமுல் நடத்த வேண்டுமென்பதே இந்திய அரசாங்கத்தின் விருப்பமாகும் என்று தெரிவித்த அவர், இந்திய அரசு தனது அயல் நாடான இலங்கையுடன் நல்லுறவையே பேண விரும்புவதாகவும் இனப் பிரச்சினை இரு நாடுகளின் உறவுகளுக்கும் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதே புதிய இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்தார். 

இந்தப் பிரச்சினை இனியும் இழுபடக்கூடாது என தெரிவித்த தேசிய பொதுச் செயலாளர். அரசாங்கமும் தமி;ழ் மக்களும் விட்டுக் கொடுப்புடன் முன் வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார். இதன் போது மு.கா.பிரதித்லைவர் ஹாபிஸ் நசீர் அஹமட் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை இனப் பிரச்சினை தீர்வில் புறக்கணிக்கப்பட்டதையும் இந்த பிரச்சினை இழுபடுவதற்கு முஸ்லிம்கள் தொடர்பில் அரசாங்கமும் தமிழர் தரப்பும் கரிசனை எடுக்காததே மற்றொரு காரணமென்றார். 

 அதன் போது கருத்துத் தெரிவித்த பி.முரளிதர் ராவ் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் இந்தியா ஏற்கனவே கருத்தில் எடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 பொருத்தமான , எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகள் காணப்பட வேண்டுமெனவும் பி.முரளிதர் ராவ் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :