முசலியான் வாஜித்-
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட அகத்திமுரிப்பு கிராம சேகவர் உத்தியோகத்தர் பிரிவில் அலக்கட்டு கிராமத்தில் தற்போது மக்கள் மிள்குடி வருகின்றார்கள் அந்த வகையில் மக்களின் மிகவும் முக்கியமான பிரச்சினையாக காணப்பட்ட பாதை மற்றும் மின்சாரம் தேவைகளை நிறைவு செய்யும் முகமாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சருமான றிசாட் பதியுதினின் பணிப்புறையின் பேரில் முசலி பிரதேச சபை தவிசாளர் தேச மானிய எஹியா பாய்யினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தவிசாளர் மேலும் தெரிக்கையில் அமைச்சின் பணிப்புறையின் பேரில் முசலி பிரதேசத்தில் இன்னும் பல வேலை திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் அகத்திமுரிப்பு கிராமத்தின் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் கழந்து கொண்டனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment