இலக்கிய எழுத்தினூடாக ஒரு கின்னஸ் சாதனை 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதும்-ஜெயராஜ்

லக வரலாற்றில் முதல் தடவையாக, குறிப்பிட்ட ஒரு தலைப்பில் 12 மணித்தியாலங்கள் தொடர்ந்து எழுதும் கின்னஸ் உலக சாதனை ஒன்று இடம் பெறவிருக்கிறது. எதிர்வரும் 30 ஆகஸ்ட் 2014 ஆம் திகதி கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் 1978களில் இருந்து எழுதிவருபவரும், சுதந்திர ஊடகவியளாலரும் வானொலி ஊடகவியளாலருமான அனிஸ்டஸ் ஜெயராஜா 'கரன்சி (பணநோட்டு) இல்லாத உலகம்' எனும் தலைப்பில் எழுதி இக்கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

உலக வரலாற்றில் இதுவரை கின்னஸ் சாதனை விளையாட்;டுப் போன்ற உடலியல் சம்மந்தப்பட்ட துறைகளில் பெருமளவுக்கு நிகழ்த்தப்ட்டுவருகின்றன. நூல்களின் தொகை, இலக்கங்கள் அல்லது ஸ்ரீராமஜெயம், போன்றவற்றை எழுதுவதுமான விடயங்கள் காணப்பட்டாலும், இலக்கியம் அல்லது எழுத்துத் துறைசார்ந்த முயற்சிகள் கின்னஸ் உலகசாதனை வரலாற்றில் இல்லையென்றே சொல்லலாம்;.
அனிஸ்டஸ் ஜெயராஜா ஏற்கனவே இலங்கையின் எழுத்துப் புலத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளாரவார். மறைந்த தலைவர், மாமனிதர் மர்ஹூம். எம்.எச்.எம். அஸ்ரஃப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு நூல்கள்; பலவற்றையும் எழுதி வெளியிட்டார்.

இவரது எழுத்துலகப் பிரவேசம் 1979களிலான 'சேகுவேரா' என்ற ஒரு குறு நாவலுடன் ஆரம்பமாகிறது. இதுவரையில் 25ற்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

பல்வேறு துறைகளிலும் கால்பதித்துள்ள ஆழமான அனுபவங்களும், நாடுபூராவும் அலைந்து திரிந்து வாழ்ந்த நாடோடி வாழ்க்கையும் இவரது எழுத்துலகப் பலம் எனலாம்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிப் பரிச்சயம் கொண்ட இவரது ஆற்றலை, அவரது படைப்புக்கள் வெளிப்படுத்துகின்றன. முதல் முறையான தனது சாதனை முயற்சி ஒன்று வெற்றிப் பெற,அனைத்து மக்களினதும் ஆசீர்வாதங்களையும் வேண்டி நிற்கின்றார். நாமும் அவருடன் கைகோர்ப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :