வடக்­கிலும் தெற்­கிலும் இளை­ஞர்கள் ஏரா­ள­மாக இறந்­ததால் அதன் காயங்கள் ஆறு­வ­தற்கு கால­மெ­டுக்கும்- ஜனாதிபதி

யுத்­தத்தின் போது வடக்­கிலும் தெற்­கிலும் இளை­ஞர்கள் ஏரா­ள­மாக இறந்­ததால் அதன் காயங்கள் ஆறு­வ­தற்கு கால­மெ­டுக்கும் என ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

இலங்­கைக்கு முதற்­த­ட­வை­யாக விஜயம் மேற்­கொண்­டுள்ள போர்த்­துக்கல் பிர­தமர் பெட்ரோ பஸொஸ் கொயல்­கோ­வுக்கும் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷ­வுக்­கு­மி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் இலங்­கைக்­கான போர்த்­துக்கல் தூதுவர் ஜோர்ஜ் றோஸா டி ஒலி­வெய்­ராவும், வெளிவி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சின் செய­லாளார் ஷெனுகா சென­வி­ரத்ன, ஜனா­தி­ப­தியின் பணி­யாட்­தொ­குதி தலைவர் காமினி செனரத், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ளரும், ஜனா­தி­ப­தியின் இணைப்­பா­ள­ரு­மான அருண் தம்­பி­முத்து, உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் பங்­கேற்­றனர். இதன் போது கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

வடக்கு,கிழக்கு உட்­பட நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் கூட விடு­த­லைப்­பு­லிகள் உட்­கட்­ட­மைப்­புக்கள் அனைத்­தையும் நிர்­மூ­ல­மாக்­கினர். மக்கள் பயத்தின் பிடியில் வாழ்ந்­தார்கள். பயங்­க­ர­வா­தத்தால் நாடு பேர­ழிவைச் சந்­தித்­தது. கடந்த வரும் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பல தலை­வர்கள் ஊட­கங்­களில் அறிக்­கை­யி­டு­பவை நாட்டின் உண்மை நிலை­வ­ரத்­தி­லி­ருந்து அதிகம் வேறு­ப­டு­வதை அறிந்து ஆச்­ச­ரி­ய­ம­டைந்­தனர். தெற்­கிலும் வடக்­கி­லு­மி­ருந்து ஏரா­ள­மான இளை­ஞர்கள் இறந்­ததன் கார­ண­மாக போரின் காயங்கள் ஆறு­வ­தற்கு கால­மெ­டுக்கும் என்றார்.

இதன்­போது போர்த்­துக்கல் பிர­தமர் கருத்து வெளியி­டு­கையில்,

இலங்­கை­யு­ட­னான உற­வு­களை மேலும் முன்­னேற்­றிக்­கொள்ள போர்த்­துக்கல் விரும்­பு­கின்­றது. இலங்­கையின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 7.3வீத­மாக காணப்­ப­டு­கின்ற நிலையில் வடக்கு கடந்த சில வரு­டங்­களில் 20முதல் 24 சத­வீத வீச்சில் வளர்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றமை மிகவும் அற்­பு­த­மான முடி­வாகும். பொரு­ளா­தா­ரத்­துறை மாத்­தி­ர­மின்றி அரசியல், கலாசார துறைகளிலும் ஆழமான உறவுகளையே வேண்டிநிற்கின்றது. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மாத்திரமின்றி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய விடயங்களையும் கலந்துரையாடுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :