இலங்கை விட­யத்தில் தலை­யிட தலாய்­லா­மா­விற்கு உரிமை இல்லை-ஓமல்பே சோபித தேரர்

லங்­கையில் பௌத்­தர்­களை காப்­பாற்ற சிறந்த தலைவர் இல்­லாது போய்­விட்டார். முஸ்லிம் தீவி­ர­வா­திகள் கிளர்ச்­சி­களை மேற்­கொண்­டாலும் சிங்­கள பெளத்­தர்கள் தான் அடக்­கு­மு­றை­களை கையாள்­கின்­றனர் என சர்­வ­தேச அளவில் கருத்து பரப்­பப்­ப­டு­கின்­றது என தெரி­விக்கும் ஓமல்பே சோபித தேரர் இலங்கை விட­யத்தில் தலை­யிட தலாய்­லா­மா­விற்கு உரிமை இல்லை. அவர் பௌத்­த­மத்­திற்கு தலைவர் இல்லை எனவும் குறிப்­பிட்டார்.

கொழும்பு பௌத்­த­ாலோக மாவத்­தையில் நேற்று இடம்­பெற்ற பெளத்த மத நிகழ்வில் உரை­நி­கழ்­த்து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அவர் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் பௌத்த மதம் அழிந்துக் கொண்டு செல்­கின்­றது. பௌத்த கொள்­கை­க­ளையும் சிங்­கள பெளத்த மக்­களையும் காப்­பாற்ற யாரும் இல்லை. இன்று சர்­வ­தேச அளவில் இலங்கை குற்­ற­வாளி நாடாக சித்திரிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது. இலங்­கையில் முஸ்லிம் குழுக்­களின் மோதல்­க­ளையும் சிங்­கள மக்­க­ளுக்­கெ­தி­ரான முஸ்லிம் பிரி­வி­னை­வாதக் குழுக்­களின் அடா­வ­டித்­த­னங்­க­ளையும் சர்­வ­தேசம் கண்­டு­கொள்ள வில்லை. மாறாக நாட்டில் பௌத்த பேரி­ன­வாத சக்தி சிறு­பான்மை மக்­களை அடங்­கு­கின்­றது என்ற கருத்­தி­னையே சர்­வ­தேச அரங்கில் முன்­வைக்­கின்­றனர்.

அதை எதிர்த்து கருத்து வெளி­யிட நாட்டில் சிறந்த மதத் தலைவர்கள் இல்­லாது போய்விட்­டார்கள். பௌத்த மதத்தின் பாதையில் நாட்டை இட்டுச் செல்ல நல்­ல­தொரு தலைவர் இல்­லாது போய்விட்டார்.

அர­சியல் ரீதியில் பேசும் தலை­வர்கள் மதம் சார்ந்தும் பௌத்­தத்தை பாது­காக்கும் நோக்­கிலும் இந்த நாட்டின் உண்மை நிலை­மை­யினை சர்­வ­தேச அளவில் கொண்டு செல்ல முடியாது போயுள்­ளது. எமது நாட்டின் மீது குற்றம் கூற இன்று சர்­வ­தேச அளவில் தலை­வர்கள் உரு­வா­கி­விட்­டார்கள். திபெத்­திய பௌத்த மதத்­த­லைவர் தலாய்­லாமா கூட இலங்கையில் பௌத்த தீவி­ர­வாதம் தலை தூக்­கி­யுள்­ள­தென அறிக்­கை­வி­டுத்­துள்ளார்.

இங்கு முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றார்கள் எனவும் தெரி­வித்தார். இவரின் கருத்தை பௌத்த மதத்தின் கருத்­தா­கவும் பௌத்த மத தலை­வரின் கருத்­தா­கவும் எண்ணி சர்­வ­தேச ஊட­கங்கள் இலங்­கையின் மீது தவ­றான கோணத்தில் கருத்து வெளி­யி­டு­கின்­றன. உண்­மை­யி­லேயே தலாய்லாமா என்­பவர் பௌத்த மதத்தில் உள்ள பிரி­வு­களில் ஒரு பிரிவின் தலைவர் மட்­டுமே அவ­ரைப்போல் பலர் இருக்­கின்­றார்கள். எனவே அவரின் கருத்தை முக்­கிய கருத்­தாக கரு­து­வது அர்த்­த­மற்­றது.

அதே போல் இலங்­கையின் உண்மை நிலைமை புரி­யாது இலங்­கையில் என்ன நடக்­கின்­றது என்று தெரியாது அவர் கருத்து வெளியிடுவது தவறானது. மேலும் இந்த நாட்டில் பௌத்த கொள்கையை பாதுகாக்க, சிங்கள மக்களை பாதுகாக்க சிறந்த பௌத்த மத தலைவர் ஒருவர் உருவாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :