இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சே­கா­வுக்கு நடந்த கதியே நேரும்-அமைச்சர் டலஸ் அழகப் பெரும

டை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பா­ள­ராக மாது­லு­வாவே சோபித தேரர் கள­மி­றக்­க­ப்ப­டு­வா­ரானால், 2010 ஆம் ஆண்டு பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சே­கா­வுக்கு நடந்த கதியே நேரும் என இளைஞர் விவ­காரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரி­வித்­துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வி­ருப்­ப­தாக ஊகத்தின் அடிப்­ப­டையில் தக­வல்கள் வெளி­யாகி கொண்­டி­ருக்­கின்ற நிலையில் எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்கு மாது­லு­வாவே சோபித தேரரின் பெயர் ஊட­கங்­களில் முன்­மொ­ழி­யப்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லை­யி­லேயே அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

கலி­க­முக பிர­தே­சத்தில் இடம் பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது ,

நடை­பெ­ற­வி­ருக்­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பா­ள­ராக மாது­லு­வாவே சோபித தேரர் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்ளார் என்ற தகவல் ஊட­கங்­களில் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றது.

அது மாத்­தி­ர­மன்றி பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு தயார் என்ற நிலையில் சோபித தேரரும் தெரி­வித்து வரு­கின்றார். 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு எதிர்க்­கட்­சி­களின் தரப்­பி­னரால் உந்­தப்­பட்­டி­ருந்தார். அதனால் தேர்தல் களத்தில் குதித்த அவர் பல அசௌ­க­ரி­யங்­களை சந்­தித்தார். சரத் பொன்­சேகா என்­பவர் சுரண்­டப்­பட்டு வீசப்­பட்ட செல்­லு­ப­டி­யற்­ற­தான லொத்தர் சீட்­டுக்கு நிக­ரா­ன­வ­ரா­கவே காணப்பட்டுவருகின்றார். அந்த வகையில் மாதுலுவாவே சோபித தேரர் பொது வேட்பாளராக களமிறக்கப் படுவாறேயானால் சரத் பொன்சேகாவுக்கு என்ன நடந்ததோ அதுவே சோபித தேரருக்கும் நடக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :