கூட்டமைப்பு பதிவு தொடர்பில் இறுதி முடிவு எதுவும் இல்லை, ஒற்றுமையாக செயற்படுவோம்- சம்பந்தன்

மிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சியல் கட்­சி­யாகப் பதி­யப்­ப­டுமா என்­பதை அதன் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தெளி­வு­ப­டுத்­துவார் என யாழ்ப்­பா­ணத்தில் நேற்று நடை­பெற்ற ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் சிறப்பு மாநாட்டில் பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மையில் நடை­பெற்ற இந்தச் சிறப்பு மாநாட்டில் அவர் சிறப்­பு­ரை­யாற்­று­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­பட வேண்டும் என திரு­கோ­ண­ம­லையில் நடந்த கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டு அதற்­காக ஒரு குழுவும் நிய­மிக்­கப்­பட்­டது.

ஆனால் அதற்­கான நட­வ­டிக்­கைகள் மந்­த­க­தி­யி­லேயே நடை­பெற்று வரு­வ­தா­கவும் இப்­ப­திவு விட­யத்தை விரை­வு­ப­டுத்த வேண்டும் எனவும் அதற்காக தமிழ்த் தேசிய சபை ஒன்றை உருவாக்க வேண்­டு­மெ­னவும் பகி­ரங்­க­மாகக் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து அங்கு உரை­யாற்­றிய வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்வரன், உரு­வாக்­கப்­பட வேண்­டி­யது தமிழ்த் தேசிய சபையா அல்­லது தமிழ் பேசு­ப­வர்கள் சபையா அல்­லது தமிழ் மக்கள் ஐக்­கிய சபையா என்­பதை முதலில் தீர்­மா­னிக்க வேண்டும். அதன் பின்­னரே எமது இறுதி இலக்கை நாம் அடைய முடியும் எனத் தெரி­வித்தார்.

இறு­தி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் உரை­யாற்­று­கையில்,

கூட்­ட­மைப்பு பல்­வேறு கட்­சி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட அமைப்பு. இங்கு கருத்து வேறு­பாடு இல்­லை­யென நான் கூற­மாட்டேன். இருப்­பினும் எமக்குள் அதனைப் பேசித்­தீர்த்து ஒற்­று­மை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.

இந்த ஒற்­று­மையின் வெளிப்­பாட்டால் தான் சர்­வ­தேச சமூகம் அர­சாங்­கத்தை எம்­முடன் பேசு­மாறு கூறி­யுள்­ளது. இவை ஒற்­று­மையின் அடிப்­ப­டை­யிலும் தமிழ் மக்கள் விசு­வாசம் வைக்­கின்ற அமைப்பு இதுதான் என ஜன­நா­யக ரீதியில் அடை­யாளம் காட்­டி­ய­ப­டியால் கிடைத்த வெற்றி. இதனைப் பலப்­ப­டுத்த வேண்­டி­யது எமது கடமையாகும் எனத் தெரிவித்தார்.vk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :