ஊவா தேர்தலில் மு.கா.வும் அ.இ.ம.கா.வும் பொதுச் சின்னத்தில் போட்டியிட இணக்கம்

வா மாகாண சபைத் தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம்கொள்கையளவில் இணங்கியுள்ளன என அகில மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை பெறுவதற்கு தாம் எல்லா வகையான விட்டுக் கொடுப்புக்கைளையும் மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரித்தார்.இது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி குறிப்பிடும் போது

மலையக முஸ்லிம் கவுன்சில் மற்றும் அ.இ.ம.கா. ஆகியன ஊவா மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் அண்மையில் இடம் பெற்றன. இக்கலந்துரையாடலில் பொதுச்சின்னத்தில் பேட்டியிடுவது தொடர்பாக கொள்கையளவில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மலையக முஸ்லிம் கவுன்சில் ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவம் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :