குறித்த மாணவி வகுப்பறையைச் சுத்தம் செய்யவில்லை என்ற காரணத்துக்காக அதே பாடசாலை மாணவர்களைக் கொண்டு மாணவியின் தலையில் குட்டுவதற்கு இவர் உத்தரவிட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த மாணவி பாதிகப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இந்த மாணவியின் தாய் இது தொடர்பில் தெரிவிக்கையில், எனது மகளின் தலையில் சுமார் பத்து மாணவர்கள் குட்டியுள்ளனர். அவர் அழுது கொண்டே வீடு வந்து நடந்த விடயத்தைக் கூறினார். அத்துடன் தனக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனது மகள் ஆகஸ்ட் மாதம் பரீட்சை எழுதவுள்ளார். ஆனால், அவள் தான் இனிமேல் பாடசாலைக்குச் செல்லமாட்டேன என அடம்பிடிக்கிறாள். எனது மகளின் தலையில் குட்டிய மாணவர்கள் தங்களது அதிபர் கூறியதற்காகவே .இவ்வாறு செய்தோம் என கூறினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அதிபரைக் கைது செய்து பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்த போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
தமிழில்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில்: பண்டாரமுதியன்ஸே, காமினி ஒபயசேகர
(கொஸிப்லங்கா நியுஸ்)

0 comments :
Post a Comment