தமிழ் மக்­க­ளிடம் காணப்­படும் குணம் முஸ்லிம் மக்­க­ளிடம் இல்­லா­த­தை­யிட்டு நான் கவ­லை­ய­டை­கின்றேன்-ஹசன் அலி

பீனிக்ஸ் பற­வைபோல் தமிழ் மக்­க­ளிடம் காணப்­படும் போராட்ட குணம் முஸ்லிம் மக்­க­ளிடம் இல்­லா­த­தை­யிட்டு நான் மிகவும் கவ­லை­ய­டை­கின்றேன். தங்கள் மீது தொடர்ந்து நடை­பெற்­று­வரும் அடக்கு முறை­க­ளுக்கு எதி­ராக தமி­ழர்கள் தொடர்ச்­சி­யாகப் போராடி வரு­கின்­றார்கள். சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய நாம் ஒன்­று­பட்­டாலே இந்த அரசின் அடக்கு முறை­க­ளி­லி­ருந்து மீள முடியும் என முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹசன் அலி தெரி­வித்தார்.

யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நேற்று நடை­பெற்ற ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் 34 ஆவது சிறப்பு மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் அங்கு உரை­யாற்­று­கையில்,

ஒரு ஆற்­றுக்குள் இருக்கும் கருங்­கல்­போன்றே முஸ்லிம் காங்­கிரஸ் இந்த அர­சாங்­கத்­துடன் உள்­ளது. ஆற்­றுக்குள் கருங்கல் மூழ்­கி­யி­ருந்­தாலும் அதனுள் நீர்­புக முடி­யாது. அவ்­வாறே முஸ்லிம் காங்­கி­ரஸும் அர­சுடன் இணைந்­தி­ருந்­தாலும் அவ் அர­சாங்­கத்தின் அடா­வடிச் செயற்­பா­டு­க­ளுக்கு இணங்கிப் போகாமல் இருந்து வரு­கின்றது.

இது முஸ்லிம் மக்­க­ளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் நன்கு தெரியும். கிழக்கு மாகாண சபை ஆட்­சி­ய­மைக்­கும் ­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தம்­மோடு இணைந்து ஆட்­சி­ய­மைக்
கு­மாறு அழைப்பு விடுத்­தனர். அத்­துடன் முத­ல­மைச்சர் பத­வி­யையும் விரும்­பிய அமைச்சுப் பத­வி­க­ளையும் தரு­வ தாகத் தெரி­வித்­தனர். அப்­போது அர­சுடன் இணைந்து செயற்­ப­டுவோம் என்ற நப்­பா­சை­யுடன் கூட்­ட­மைப்பின் இந்தக் கோரிக்­கைகளை நிரா­க­ரித்து நாம் அர­சாங்­கத்­துடன் இணைந்து
கிழக்கு மாகாண சபை ஆட்­சியை அமைத்தோம்.

வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகு­தி­களில் வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­பட்­டு­விடும் என்ற அச்­சத்­தி­னா­லேயே சில நிபந்­த­னை­களுடன் அன்று அர­சாங்­கத்­துடன் இணங்கிப் போனோம்.

இவ்­வாறு நாம் அர­சுடன் நல்­லெண்­ணத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் ஒற்­று­மை­யாக செயற்­பட இணங்­கிப்­போன பின்­னரும் முஸ்லிம் மக்கள் அச்­சப்­படும் வகையில் பல சம்­ப­வங்கள் அங்கு நடந்­தே­றி­யுள்­ளன. இன்­று­வரை 300 இற்கும் மேற்­பட்ட அச்­ச­மான சம்­ப­வங்கள் சிங்­கள இன­வா­தி­க­ளினால் கிழக்கில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 

இதேபோல் தெற்­கிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சிங்­கள இன­வா­தி­களின் செயற்­பாடுகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இதனால் நாம் தற்­போது எமது மக்­களின் உரி­மை­களைப் பாது­காக்கும் வகையில் செயற்­ப­டு­வ­தற்­கான மாற்று யோச­னைகள் பற்றிச் சிந்­திக்க வேண்­டிய கால­கட்­டத்­திற்குத் தள்­ளப்­பட்­டுள்ளோம். தமிழ் மக்­க
ளைப் போல் நாமும் எமது மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் பாது­காப்­புக்­கா­கவும் ஓர் நிலை­யான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

தமிழ், முஸ்லிம் மக்களின் இறுதிநிலை என்ன என்ற கட்டத்தை நோக்கி நாம் இன்
னும் பயணிக்கவில்லை. விரைவில் அதைநோக்கி நாம் செல்ல வேண்டும்.
இது தொடர்பில் நாம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி ஒரு தீர்மானத்துக்கு வரு
வோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :