வாழைச்சேனையில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்தவர்கள் கைது


த.நவோஜ்-
வாழைச்சேனை மருதநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் தாயும், மகளும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை மருதநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்திருந்த வேளை சட்டவிரோதமான முறையில் கருக்கலைக்க முற்பட்டார்கள் என தமக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இவர்களை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :