த.நவோஜ்-
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இம்முறை 'சிறிய தீவுகளும் காலநிலை மாற்றமும்' எனும் தொனிப் பொருளில் நாடலாவிய ரீதியில் இடம் பெருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுற்றாடல் முன்னோடி பதங்கம் அனிவிக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு செயலமர்வும் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் நேற்று இடம் பெற்றது.
பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முயிஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சுற்றாடல் வலய அணையாளர் எம்.என்.எம்.பைஸல், பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஹப்பார் மற்றும் பாடசாலைகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம், பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலம், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் என்பவற்றில் இருந்து எழுபத்தைந்து மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
.jpg)


0 comments :
Post a Comment